பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் |
பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னத்திரை மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்தவர் அபர்ணா நாயர்(33). மேகத்தீரதம், கல்கி, முத்துகவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் நிறைய தொடர்களில் நடித்து வந்தார். இவருக்கு சஞ்சித் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். திருவனந்தபுரம் அருகே வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து வசாரித்து வருகின்றனர். அபர்ணாவின் மரணம் மலையாள சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.