இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னத்திரை மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்தவர் அபர்ணா நாயர்(33). மேகத்தீரதம், கல்கி, முத்துகவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் நிறைய தொடர்களில் நடித்து வந்தார். இவருக்கு சஞ்சித் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். திருவனந்தபுரம் அருகே வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து வசாரித்து வருகின்றனர். அபர்ணாவின் மரணம் மலையாள சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.