2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் விஷால் தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அறிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் சிங்கம் 1, 2 , வேங்கை ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதேப்போன்று விஷாலின் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை ஹரி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.