‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஏராளமான படங்களில் நடித்தவர் மயில்சாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் சிவராத்திரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு அன்பு, யுவன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடித்து வரும் இவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்ட நிலையில், அவர்களின் மனைவிகள் இருவருமே அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும், தற்போது இந்த பிரச்சனை மேலும் பெரிதாகி இருவரின் மனைவிகளும் பிரிந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி நடிகர் அன்புவை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛சிரித்துக் கொண்டே... அந்த மாதிரி ஒரு பிரச்னையும் இல்லை. பைத்தியகாரத்தனமாக உள்ளது. இவர்களுக்கு வேற வேலையே இல்லை. ஏன் இவ்வளவு கேவலமாக யோசிக்கிறார்கள் என தெரியவில்லை'' என்றார்.
மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, திமுக துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




