தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் 'போர் தொழில்'. ஒரு பரபரப்பான த்ரில்லர் படம் என விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டைப் பெற்ற படம். பல சினிமா பிரபலங்களும் படம் வெளிவந்த போது பாராட்டினார்கள்.
ஆனால், படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்த சரத்குமார் மனைவி ராதிகா இரண்டு வாரங்களுக்குப் பிறகு படத்தைப் பாராட்டி டுவீட் செய்துள்ளார். “நல்ல சினிமா… பத்திரிகையாளர்களின் சிறந்த பாராட்டுக்கள் மற்றும் வாய் வழியாக இந்தப் படம் மேஜிக் பெற்றது. சினிமாவில் ஒவ்வொரு நாளும் ஒன்றைக் கற்கிறோம், இது வழக்கத்திற்கு மாறானது, மேலும் நட்சத்திரங்களுக்கு புதிய பாதையைக் காட்டியுள்ளது. கன்டென்ட் தான் கிங் என்பதை 'போர் தொழில்' நிரூபித்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவாவது இரண்டு வாரங்களுக்குள் பாராட்டிவிட்டார். சில சினிமா பிரபலங்கள் நல்ல படம் என்று பெயரெடுத்த படங்களைக் கூட ஓடிடியில் வெளியான பிறகு பார்த்துவிட்டு பாராட்டும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.