தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

சொந்த வாழ்வில் ஏற்பட்ட சோகங்களுக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பாவனா தற்போது பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார். பிங்க் நோட், கேஸ் ஆப் கொன்டனா என்ற கன்னட படங்களிலும் 'ஹன்ட்' என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரகுமானுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி உள்ளது. இதில் ரகுமான் போலீஸ் அதிகாரியாகவும், பாவனா தடயவியல் மருத்துவராகவும் நடிக்கிறார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். புதுமுக டைரக்டர் ரியாஸ் மாரத் டைரக்டு செய்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தை அதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.