நடிகை கனகலதா காலமானார் | மே 10ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது 'ஆர்ஆர்ஆர்' | அதர்வா ஜோடியான நிமிஷா சஜயன் | 'ரசவாதி'யில் சித்த வைத்தியர் கேரக்டரை உருவாக்கியது ஏன்? : சாந்தகுமார் பேட்டி | படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது |
மானாமதுரை அருகே உள்ள கந்தசாமி முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதான நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். இதை அடுத்து மீடியாக்களை சந்தித்த கஞ்சா கருப்பு, இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது படப்பிடிப்பு இருந்ததால் என்னால் வர முடியவில்லை. அதனால் தான் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டேன்.
இதையடுத்து சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுக்க போகிறேன். அது எதற்காக என்றால், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதை அடுத்து முதல்வராக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறியுள்ள கஞ்சா கருப்பு, கூடிய சீக்கிரமே தமிழகத்தில் அதிமுகவின் நேர்மையான நல்லாட்சி நடைபெறும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்திருந்தால் கரண்ட் பில், வீட்டு வரி எல்லாம் அதிகரித்திருக்காது. அதிமுகவில் தற்போது நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்று கஞ்சா கருப்பு தெரிவித்திருக்கிறார்.