காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
மானாமதுரை அருகே உள்ள கந்தசாமி முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதான நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். இதை அடுத்து மீடியாக்களை சந்தித்த கஞ்சா கருப்பு, இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது படப்பிடிப்பு இருந்ததால் என்னால் வர முடியவில்லை. அதனால் தான் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டேன்.
இதையடுத்து சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுக்க போகிறேன். அது எதற்காக என்றால், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதை அடுத்து முதல்வராக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறியுள்ள கஞ்சா கருப்பு, கூடிய சீக்கிரமே தமிழகத்தில் அதிமுகவின் நேர்மையான நல்லாட்சி நடைபெறும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்திருந்தால் கரண்ட் பில், வீட்டு வரி எல்லாம் அதிகரித்திருக்காது. அதிமுகவில் தற்போது நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்று கஞ்சா கருப்பு தெரிவித்திருக்கிறார்.