42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி | ஆலியா பட் சண்டை காட்சிகள்: ஆச்சரியப்பட்ட பாபி தியோல் | வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ் | 'டான் 3' சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி | கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன் | தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல் | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப் | எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள் | தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ! |

ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகிய இருவரும் படங்கள் இயக்கியுள்ள நிலையில், கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் திரைப்படங்களில் நடித்து வந்தார்கள். இவர்களில் ஸ்ருதிஹாசன் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் மற்றும் தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு கவிதை மட்டுமின்றி திரைக்கதைகள் எழுதுவதிலும் அதிகம் ஆர்வம். அதனால் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். திரையுலகில் தான் ஒரு புதிய பயணத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும், திரைக்கதைகள், கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதில் தனக்கு விருப்பம் மிகுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது ஒரு திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும் பணியில் தான் தீவிரமடைந்திருப்பதாக அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
விரைவில் ஸ்ருதிஹாசனை இயக்குனராகவும் எதிர்பார்க்கலாம்.




