பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

பாகுபலி படம் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா. சமீப காலமாக பிரபல ஹீரோக்கள் வெப்சீரிஸ்களின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ள நிலையில் நடிகர் ராணாவும் முதன் முறையாக ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸில் நடித்துள்ளார்.
நிஜத்தில் இவரது சித்தப்பாவான நடிகர் வெங்கடேஷ், இந்த வெப்சீரிஸில் ராணாவின் தந்தையாக நடித்துள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோ போராட்டத்தை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. சமீபத்தில் எட்டு எபிசோடுகளாக வெளியான இந்த வெப்சீரிஸுக்கு ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும் பொதுவான நெட்டிசன்கள் பலரிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் தான் அதிகம் வெளியாகின.
காரணம் இந்த இந்த வெப்சீரிஸில் ராணாவும் சரி.. வெங்கடேஷும் சரி, பல இடங்களில் சரளமாக கெட்ட வார்த்தைகளை பேசியுள்ளனர். இதன் புரமோஷன் நிகழ்ச்சியின்போதே கூட நடிகர் ராணா இது பற்றி கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்த வெப்சீரிஸ் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களே ஒரு கட்டத்தில் இந்த வார்த்தைகளை கேட்டு எரிச்சல் அடையும் விதமாக ஓவர் டோஸ் ஆக மாறிவிட்டது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைக் கண்டு, நடிகர் ராணா தனது சோசியல் மீடியா பக்கத்தில், “இந்த வெப்சீரிஸை ஆதரித்தவர்களுக்கு நன்றி.. இதை வெறுப்பவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.




