துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
முன்னணி தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார். தற்போது புஷ்பா 2, ரங்க மார்த்தாண்டா படத்தில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அனுசுயாவின் ஆபாசமான படங்கள் வெளிவந்தது. இதுகுறித்து பலரும் அனுசுயாவை விமர்சித்து வந்தார்கள். இந்த நிலையில் அனுசுயா தனது படங்களை மர்ம ஆசாமிகள் மார்பிங் செய்து வெளியிடுவதாக ஆந்திர மாநில சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், ஆந்திர மாநிலம் பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கட்ராஜு என்பவரை கைது செய்துள்ளனர். துபாயில் பிளம்பரமாக பல ஆண்டுகள் வேலை பார்த்தவர் தற்போது பொழுதுபோக்கிற்காக நடிகைகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.