47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |

முன்னணி தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார். தற்போது புஷ்பா 2, ரங்க மார்த்தாண்டா படத்தில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அனுசுயாவின் ஆபாசமான படங்கள் வெளிவந்தது. இதுகுறித்து பலரும் அனுசுயாவை விமர்சித்து வந்தார்கள். இந்த நிலையில் அனுசுயா தனது படங்களை மர்ம ஆசாமிகள் மார்பிங் செய்து வெளியிடுவதாக ஆந்திர மாநில சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், ஆந்திர மாநிலம் பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கட்ராஜு என்பவரை கைது செய்துள்ளனர். துபாயில் பிளம்பரமாக பல ஆண்டுகள் வேலை பார்த்தவர் தற்போது பொழுதுபோக்கிற்காக நடிகைகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.