25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
வித்யா பிரதீப், ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் 'திரும்பிப்பார்'. இப்ராஹிம் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஜ்குமார், டேனியல், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு தேவ்குரு இசையமைத்துள்ளார். சக்திபிரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படம் பற்றி இயக்குனர் இப்ராஹிம் கூறியதாவது: பல நூற்றாண்டுகளாக போரில் எதிரிகளை தோற்கடிக்கப் பயன்படுத்தப்படும் 'நிழல் நடை' என்ற உத்தியை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் வித்யா பிரதீப் முதன் முறையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். ரிஸ்க்கான காட்சிகளில்கூட டூப் வைத்துக் கொள்ளாமல் துணிச்சலுடன் நடித்துள்ளார். இது அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். என்றார்.
சைவம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வித்யா பிரதீப் அதன்பிறகு பசங்க 2, அதிபர், அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம், கசட தபற, எண்ணித் துணிக படங்களில் நடித்தார். தற்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், பவுடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். பவுடர் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் வித்யா, இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.