‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் கவர்ச்சிக்கன்னியாக விளங்கியவர் சில்க் ஸ்மிதா. 80களில் அவருடைய கவர்ச்சி ஆட்டம் இல்லாத படங்களைப் பார்ப்பதே அரிது. 1996ம் ஆண்டு தனது 35வது வயதில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்குப் பின் அனுராதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி நடன நடிகைகள் பலர் வந்தாலும் சில்க் ஸ்மிதா அளவுக்கு அவர்கள் பிரபலம் ஆகவில்லை என்பது உண்மை.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2011ம் ஆண்டில் அவரது கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்க 'த டர்ட்டி பிக்சர்' என்ற படம் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைகக்கான தேசிய விருதும் கிடைத்தது.
அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான கதை எழுதும் வேலைகளை கனிகா தில்லான் தற்போது செய்து வருகிறாராம். சில்க்ஸ் ஸ்மிதாவின் இளமைக் கால வாழ்க்கை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் எனத் தெரிகிறது. இரண்டாம் பாகத்தில் மீண்டும் வித்யா பாலனே நடிப்பாரா அல்லது வேறு நடிகை நடிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.




