கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்த நயன்தாரா தற்போது அவருடன் அவ்வப்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார் நயன்தாரா.
அதேபோல தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவியுடன் அவர் இணைந்து நடித்து வரும் இறைவன் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வந்த நயன்தாரா, அந்த படத்தில் தனது காட்சிகளை சமீபத்தில் முடித்து கொடுத்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர்-3௦ல் வெளியாக இருக்கிறது. இது தவிர அகிலன் என்கிற படத்தை முடித்துவிட்ட ஜெயம் ரவி, இறைவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.