பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்தார் நயன்தாரா. இதனைத் தொடர்ந்து தற்போது இன்னொரு முன்னணி ஹீரோவான சல்மான்கான் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் தென்னிந்திய இயக்குனரான தெலுங்கு திரை உலகத்தைச் சேர்ந்த வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மணாலியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய் கண்னா மற்றும் பஹத் பாசில் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டு வருகிறது. அரவிந்த்சாமியிடமும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்பை திரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு 'தி மெசஞ்சர்ஸ்' என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.