600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பா.ரஞ்சித்தின் கடைசியாக இயக்கிய 'சார்பட்டா' திரைப்படம் வரவேற்பை பெற்றது . தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை குறுகிய காலத்தில் இயக்கியுள்ளார் . இதில் அசோக் செல்வன் , காளிதாஸ் ஜெயராம் , துஷாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் ரஞ்சித். 'பாடி பில்டிங்கை மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'மைதானம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் பிரம்மாண்டமாக 3டி வெர்ஷனில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது.