ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
தமிழில் சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன், கன்னடத்தில் இயக்கிய படம் ரணதந்திரா. தற்போது அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் இயக்கிய ரணதந்திராவை மாஸ்க் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜய ராகவேந்திரா, மேக்னா நாயுடு, ஐஸ்வர்யா, விஷால் ஹெக்டே, மது உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் கே நாராயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம் கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி ஆதிராஜன் கூறியதாவது: சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை போன்ற இடங்களில் ஒரே மாதிரியாக மர்மமான முறையில் இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். அது கொலையா?!தற்கொலையா?! இல்லை அமானுஷ்ய சக்தியின் ஆட்டமா? என்று முடிவு செய்ய முடியாமல் காவல்துறை தடுமாறுகிறது. தீவிரமாக விசாரிக்கும்போது அதன் பின்னணியில் இருக்கும் காரணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
பெண்களுக்கு தரப்படும் அதீத சுதந்திரம் அவர்களை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி விடுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத கோணத்தில் இருக்கும். த்ரில்லர் பட ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக இருக்கும். என்றார்.