சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகை ரேவதி இயக்கி, தேசிய விருது பெற்ற ‛மித்ரு மை பிரண்ட்' படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம சினிமாவுக்கு அறிமுகமானவர் வி.பிரியா. பின்னர் பிரகாஷ்ராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கண்ட நாள் முதல் என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு ‛கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தம் என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார்.
இந்த தொடரின் அறிமுக விழாவில் அவர் கூறியதாவது: வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கிறேன். கண்ட நாள் முதல் படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இதை தொடங்கினேன். எல்லோரும் இதில் அதே நம்பிக்கையோடு உழைத்துள்ளார்கள்.
பிரகாஷ்ராஜு சாருக்கு என் வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு. எனக்கு வாய்ப்பு கொடுத்தவர். அவர் இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ளார். அவரை தவிர இந்த ரோலை யாரும் செய்ய முடியாது. ஜான் விஜய், சம்பத் என அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இதில் எட்டு அத்தியாயத்திலும் தனித்தனி கதை இருக்கும், அதே நேரத்தில் பின்னணியில் ஒரு ஹைப்பர்லிங்க் தொடர்பு இருக்கும். இது ஒரு அற்புதமான அனுபவம். இந்த ஒரிஜினல் சீரீஸ் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். என்றார் பிரியா.




