பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் | மஹாராஜா 2ம் பாகத்திற்கு தயாராகும் விஜய்சேதுபதி | ஆரி அர்ஜுனனின் 'போர்த் புளோர்' | பிளாஷ்பேக் : படப்பிடிப்பு தவறாக நடந்ததால் பாட்டை மாற்றிய இளையராஜா | பிளாஷ்பேக் : எம்ஜிஆருக்கு பதில் நடித்த சிவாஜி |

நடிகர் விஷ்ணு விஷாலும், சூரியும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த நிலையில் சென்னை சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கித் தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் ஏடிஜிபியுமான ரமேஷ் குடவாலா, மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என்பவரும் பணமோசடி செய்து விட்டதாக சூரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி என்பதால் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்த கொள்வதாகவும், அதனால் வழக்க சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றும் சூரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் "உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இதுபோன்ற மோசடி பிரச்னையில் சிக்க கூடாது. கோடி கணக்கில் மோசடி நடத்திருப்பதால், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும். அதனை துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஒருவர் கண்காணிக்க வேண்டும். விசாரணையை 6 மாதத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது.




