பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

மாடல் அழகியாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு வந்தவர் ரைசா வில்சன். பியார் பிரேம காதல், வர்மா, தனுஷ் ராசி நேயர்களே படங்களில் நடித்தார். தற்போது எப்.ஐ.ஆர், காதலிக்க யாருமில்லை, பொய்கால் குதிரை படங்களில் நடித்து வருகிறார். ஏற்கெனவே கொரோனா தாக்கி அதில் இருந்து மீண்டு வந்தார். இந்த நிலையில் ரைசா வில்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் ரைசா எழுதியிருப்பதாவது: எனக்கு 2வது தடவையாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டும் தொற்றில் சிக்கி உள்ளேன். தலைவலி, காய்ச்சல், உடல்வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் உள்ளன. நடுக்கமாக உள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த வைரஸ் தொற்று இருக்குமோ, பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசம் அணியுங்கள். என்று எழுதியுள்ளார்.