நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் |

மலையாள திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக விதவிதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் குணச்சித்திர நடிகை லேனா. தமிழில் அனேகன், திரவுபதி ஆகிய படங்களில் டாக்டராக நடித்திருந்தார். மலையாளத்தில் தற்போதும் பிசியான குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார் லேனா.
கடந்த 2004-ம் வருடம் அபிலாஷ் குமார் என்கிற கதாசிரியரை திருமணம் செய்த லேனா 2013ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். விவகாரத்து உத்தரவு வந்தபோது நீதிமன்ற கேன்டீனில் தாங்கள் இருவரும் ஒரே கிண்ணத்தில் குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாக கூறும் அளவுக்கு முதல் கணவரிடம் இருந்து நட்பாகவே பிரிந்தார்.
இந்தநிலையில் பத்து வருடங்கள் கழித்து தற்போது பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் லேனா. இவர் இந்திய விமான படையில் பைலட்டாக பணிபுரிகிறார். ககன்யான் என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரசாந்த் இருந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதமே தாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ள லேனா, இது பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட திருமணம் தான். நேற்று(பிப்-27) கேரளா வந்த பிரதமர் மோடியின் கையால் சிறந்த விமானப்படை வீரருக்கான விருதை பிரசாந்த் பாலகிருஷ்ணன் பெற்ற பின்னர் தான் தங்களது திருமணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.