சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
நடிகர் தம்பி ராமையா மீது சரவணன் என்ற தயாரிப்பாளர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், 2015ம் ஆண்டில் நடிகர் உமா பதியை ராமையாவை வைத்து படம் தயாரிப்பதற்கு தம்பி ராமையாவை அணுகியிருந்தேன். அப்போது படத்தின் தயாரிப்பு பொறுப்பு அனைத்தையும் தான் மேற்கொள்வதாக நடிகர் தம்பிராமையா உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த படம் 5 வருடங்களாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் 2020ல்தான் முழுமை பெற்றது. ஆனபோதிலும் படம் இன்னும் வெளியாகவில்லை. காரணம் தம்பி ராமையாவும் படத்தின் நாயகனாக அவரது மகன் உமாபதியும் படம் வெளிவருவதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதன் காரணமாக தனக்கு இரண்டு கோடிகள் நஷ்டமானதாக தயாரிப்பாளர் சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதோடு படம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதே என்று தம்பி ராமையாவிடத்தில் கேட்டால், தன்னை மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார். இந்த புகாருக்கு தம்பி ராமையா தரப்பிலிருந்து எந்தமாதிரியான விளக்கம் வெளியாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.