ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் மிகப்பெரிய ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்தார் இந்தநிலையில், பிரித்விராஜ், நயன்தாராவை இணைத்து கோல்டு என்கிற படத்தை இயக்கி முடித்துள்ள அல்போன்ஸ் புத்ரன், தற்போது அந்த படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த படம் நேரமும் பிரேமமும் போல இல்லை. இது வேற மாதிரி படம்.. நிறைய நல்ல கதாபாத்திரங்கள், சில நல்ல நடிகர்கள், இரண்டு மூன்று பாடல்கள், நிறைய நகைச்சுவைகள் கொண்ட எனது மூன்றாவது திரைப்படம். வழக்கம் போல ஒரு எச்சரிக்கை! போரையும் பாசத்தையும் எதிர்பார்த்து யாரும் அந்த பக்கம் வரக்கூடாது” என கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.