காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்று தங்களது தனித் திறமையால் தனி முத்திரை பதித்தவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு ஆகியோருக்கு ஒரு ஒற்றுமை உண்டு. அவர்கள் மூவருமே ஒரே டிவியில் இருந்து சென்றவர்கள்.
அந்த வரிசையில் 'குத் வித் கோமாளி' புகழ் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தனது முதல் படமான 'சபாபதி' படத்தில் புகழ் இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமேதான் நடித்திருந்தார். அதிலும் அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை. அது ரசிகர்களுக்கு எமாற்றமாகிவிட்டது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது சந்தானம் முன்னெச்சரிக்கையாக என்னையும், புகழையும் எதிர்பார்த்து வராதீர்கள் என்று சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்துள்ளது.
இருந்தாலும் புகழ் அடுத்தடுத்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் டிவியைப் போலவே ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்று நம்புவோம்.




