துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சீனு ராமசாமி இயக்கத்தில், இளையராஜா - யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாமனிதன்'. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டரை வருடங்களுக்கு முன்பாக 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிந்துவிட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது.
இப்படம் பற்றிய வெளியீட்டு அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவும் அறிவிக்கவில்லை. ஆனாலும், படத்தின் இரண்டு பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளார்கள். அந்தப் பாடல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் படம் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி நேற்று வெளியிட்டுள்ளார். டுவிட்டரில், “37 நாள் படப்பிடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம். எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து திரை தொடக் காத்திருக்கிறது. அடுத்த வாரம் சென்சார் போகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் சீனுராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் படல் நடித்த 'இடம் பொருள் ஏவல்' படம் முடிந்வடைந்து ஆறு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது. ஓடிடியிலாவது இப்படம் வெளிவருமா என விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமி இப்படம் பற்றி இதுவரையிலும் எதுவுமே சொன்னதில்லை.