'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் த்ரிஷயம்.. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம்-2 தயாராகி, வரும் பிப்-19ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக தான் பேசும் ஒரு வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் மோகன்லால். கூடவே ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் முதல் பாகத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார் மோகன்லால். மேலும், “உங்கள் குடும்பத்தை காக்க நீங்கள் எந்த அளவுக்கு துணிவீர்கள்” என கேள்வியும் எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதுடன், “:நான் எப்போதுமே ஒரு படி முன்னாடியே செல்வேன்.. என்னுடைய அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என யாராவது யூகிக்க முடியுமா ?. உங்களுடைய தியரிகளை ஷேர் பண்ணுங்கள்” என்று ரசிகர்களுக்கு சவாலும் விடுத்துள்ளார்.