சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகி உள்ள 'காந்தாரா சாப்டர்-1' படம் திரைக்கு வந்து பத்து நாட்களில் உலக அளவில் 500 கோடி வசூலித்து இருக்கிறது. குறிப்பாக இந்த படம் தெலுங்கு மாநிலங்களின் பாக்ஸ் ஆபிஸில் 82 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து ரிஷப் ஷெட்டி தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''அதிகப்படியான வரவேற்பு கொடுத்த தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி. 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அன்பும் பாராட்டும் முந்தைய படமான காந்தாரா பெற்றதை போலவே வலிமையாக உள்ளது. என்னுடைய பயணத்தை ஆதரித்த அனைவருக்கும் நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்'' என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.