பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் | ராம்சரண் மனைவியிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்து வந்த பரிசுப் பெட்டகம் | ஜனநாயகன் லீக் விவகாரம் : மேலும் ஒருவர் கைது | 'மாம் 2' படப்பிடிப்பில் குஷி கபூரின் நடிப்பால் அதிருப்தியில் படக்குழுவினர் | அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள் ரேஸிங்கில் இறங்கிய அஜித் குமார் | ஒருவர் சம்பாதித்தால் போதும் ; மகனின் மனோபாவம் குறித்து மோகன்லால் பெருமிதம் | 'திரிஷ்யம்' நடிகையின் புகாரை விசாரிக்க ஐவர் குழு அமைத்த ஸ்வேதா மேனன் | சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர் | வெளி மாநிலங்களில் 70 கோடி வசூலித்த 'கருப்பு' | ஓடிடியில் மீண்டும் 'துரந்தர்': இந்த வாரம் மிஸ் பண்ணிடாதீங்க...! |

கண்ட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் தற்போது கன்னடம் மட்டுமின்றி தமிழிலும் ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கன்னடத்தில் அவரது நடிப்பில் வெளியே உருவான வேதா திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் வேதா படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த 2015ல் சிவராஜ்குமார் நடிப்பில் கேங்ஸ்டர் படமாக வெளியான முப்டி படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ‛பைரதி ரணகல்' என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. முப்டி படத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயரையே இந்தப்படத்தின் டைட்டிலாக மாற்றியுள்ளார்கள். முதல் பாகத்திற்கு முன்னதாக சிவராஜ்குமாரின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை சொல்லும் விதமாக ப்ரீக்வல் ஆக இந்த இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் நார்தன் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இந்த முப்டி திரைப்படம் தான் தற்போது தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல என்கிற பெயரில் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




