‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சபரிமலையில் உள்ள ஐயப்பனின் பக்தையான மாளிகைப்புரத்து அம்மன் கதையை மையப்படுத்தி மலையாளத்தில் மாளிகைப்புரம் என்கிற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஐயப்ப பக்தையாக சிறுமி தேவானந்தா என்பவர் நடித்திருக்கிறார். விஷ்ணு சசி சங்கர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அமலாபால் நடித்த கடாவர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளைதான் கதை எழுதியுள்ளார்.
இந்த படத்தின் துவக்கத்தில் ஐயப்பன் மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் இருவர் பற்றிய கதைச்சுருக்கம் இடம்பெறுகிறது. இதனை மம்முட்டி பேசினால் நன்றாக இருக்கும் என நினைத்த படக்குழுவினர் அவரிடம் அதை கோரிக்கையாக வைத்தனர். படத்தின் ஹீரோவான உன்னி முகுந்தனுடன் மம்முட்டி நெருங்கிய நட்பு கொண்டவர் என்பதால் அவரும் மறுப்பின்றி சம்மதித்து இந்த கதை சுருக்கத்திற்கு டப்பிங்கும் பேசியுள்ளார். மம்முட்டியின் குரல் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிட்டது என்கின்றனர் படக்குழுவினர்.




