15 வயதில் என் போட்டோவை மார்பிங் செய்தனர் : ஜான்வி கபூர் வேதனை | சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... எதிராக வடிவேலு? | டிரைலருக்கு தனி எடிட்டர் தேவையா? கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர் | 'யூத் 2' உருவாகுமா? கென் கையில் முடிவு | ஏப்ரல் 10ல் ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி | அடுத்த வாரிசு நடிகை… பிரியங்கா ராஜகுமாரன் | டாக்டர் ராஜசேகருக்கு 'கம்பேக்' கொடுத்த 'பைக்கர்' | மழையால் 'எல்ஐகே' விழா தள்ளி வைப்பு | விஜய் சுட்ட 13வது ஆள் நான் தான் : விக்னேஷ் சிவன் | ‛ரஞ்ஜன்' ஆன ‛கோர்ட்' : அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மகன் பிரசாந்த் நடிக்கிறார் |

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் 'புஷ்பா ; தி ரைஸ்' என்கிற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. ராஷ்மிகா கதாநாயகியாக, பஹத் பாசில் வில்லனாக நடிக்க, சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார். பான் இந்தியா ரிலீசாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப்படம் உலகெங்கிலும் இன்று வெளியானாலும் கூட கேரளாவில் இதன் மலையாள பதிப்பு இன்று வெளியாகவில்லை.
இதனால் கேரளாவில் உள்ள அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தப்படத்தின் ஒலிப்பதிவு பணிகளை பொறுப்பேற்றுள்ள ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியரான ரசூல் பூக்குட்டி, இந்தப்படம் தாமதமாவது குறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தப்படத்தின் ஒலிப்பதிவு பணிகளில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தியுள்ளோம்.. ஆனால், இந்த சாப்ட்வேரில் ஏற்பட்ட எதிர்பாராத பிழை காரணமாக அதன் அவுட் எடுக்கும்போது நாங்கள் எதிர்பார்த்த தரத்தில் பிரின்ட் எடுக்க முடியவில்லை. அதனால் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பிரிண்ட்டை கொடுக்க வேண்டும் என்பதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பிரிண்ட்டுகள் தயாராகிக்கொண்டு இருக்கின்றன” என கூறியுள்ளார்.
இதனால் புஷ்பாவின் மலையாள பதிப்பு ஒருநாள் தாமதமாக நாளை (டிச-18) தான் வெளியாகும்.. என்றாலும், கேரள தியேட்டர்களில் இன்று புஷ்பா தமிழ்ப்பதிப்பினை திரையிட்டு படம் பார்க்க வந்த ரசிகர்களை ஒருவழியாக சமாளித்து வருகின்றனர்.