‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ஆகியோர் 2015 முதல் 2023 வரை தன்னை வியாபார ரீதியாக ஏமாற்றியதாக தீபக் கோத்தாரி என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை பொருளாதார குற்றப் பிரிவினர் விசாரித்து வருகிறார்கள். ஷில்பா மற்றும் அவரது கணவருக்கு எதிராக ஏற்கெனவே 'லுக் அவுட் நோட்டீஸ்' உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டியிடம் சில தினங்களுக்கு முன்பு நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் வந்த வழக்கு விசாரணையின் போது ஷில்பா தம்பதியினர் 60 கோடி ரூபாயை செலுத்திய பிறகுதான் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த தீபக், ஷில்பா தம்பதியிடம் வியாபார அபிவிருத்திக்காகக் கொடுத்த பணத்தை அவர்கள் தங்களது சொந்த செலவுக்காகப் பயன்படுத்தினார் என்று புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த பொருளாதார குற்றப் பிரிவினர் அதை விசாரணையில் உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதபடி 'லுக் அவுட் நோட்டீஸ்' உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.




