துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட்டின் அடுத்த நட்சத்திர திருமணமாக நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வரும் இவர்களது திருமணம் பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது.
அந்தத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது. வரும் ஏப்ரல் 17ம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆலியாவின் தாத்தா ஒருவர் உடல்நலக் குறைவாக இருக்கிறாராம். தனது பேத்தியின் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதால் இப்போது திருமணம் நடைபெறுவதாகத் தெரிகிறது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மும்பையில் உள்ள ஆர்கே ஸ்டுடியோஸில் இத்திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
ஆலியா, ரன்பீர் இருவருமே பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளார்கள். இருவரும் இணைந்து நடித்துள்ள 'பிரம்மாஸ்திரா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்தது. ஆலியா பட் தெலுங்கில் அறிமுகமான 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த மாதக் கடைசியில் வெளியாக தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆலியா, ரன்பீர் இருவரும் தங்களது திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும், முதலில் நடத்த உள்ள பேச்சுலர் பார்ட்டிக்கு யார் யாரை அழைக்கலாம் என ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.