நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிய அளவில் குறைந்து விட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் சில பிரபலங்கள் அவ்வப்போது கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துகொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, தான் கடந்த மாதம் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்ததாக தற்போது கூறியுள்ளார்.
கடந்த மாதம் டைகர்-3 படப்பிடிப்பிற்காக ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவுக்கு சென்றிருந்தபோது அங்கே கொரோனா பாசிடிவ் என்பது உறுதியாகி, நான்கு நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டேன் என்று கூறியுள்ளார் இம்ரான் ஹாஸ்மி. இந்தியாவிலிருந்து விமானம் ஏறும் முன்போ, அல்லது விமானத்தில் பயணித்த சமயத்திலோ தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி ஒரு மாதம் கழித்து அவர் இதை கூறுவதற்கு காரணம் இருக்கிறது. அவர் தற்போது நடித்துள்ள டைபக் என்கிற ஹாரர் படம் வரும் அக்-29ல் வெளியாக இருக்கிறது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இம்ரான் ஹாஸ்மி, தனக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டதையும் ஒரு பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி வருகிறார் என்றே பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.