உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
தில், உள்ளம் கொள்ளை போகுதே, பாபா உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர நடிகையாகவும், ஏராளமான சீரியல்களில் முதன்மை வேடத்திலும் நடித்தவர் தீபா வெங்கட். இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் கூட. சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் இவர் உயிரிழந்துவிட்டதாக காலை முதலே சமூகவலைதளங்களில் செய்திகள் றெக்க கட்டி பறந்தன. ஆனால் அது உண்மையல்ல.
இதுகுறித்து தீபா வெங்கட்டின் அம்மா பத்மா வெங்கட்டை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛‛என் மகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு எந்த பிரச்னையும். வீட்டில் நலமுடன் இருக்கிறார். அவர் தான் வீட்டில் எல்லா வேலைகளும் செய்கிறார். யார் இதுபோன்று செய்திகளை பரப்பி விட்டார்கள் என தெரியவில்லை. காலை முதலே நிறைய போன்கள் வந்தன. தயவு செய்து இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்'' என்றார்.