டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற வேடத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய்க்கு முதன் முதலாக தான் தமிழில் டப்பிங் கொடுத்திருப்பதாக நடிகை தீபா வெங்கட் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்து இருக்கிறேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி, என தெரிவித்துள்ளார் தீபா வெங்கட்.