நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவி என்கிற படம் தயாராகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். கங்கனாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கங்கனா பற்றி பேசிய பாகுபலி படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், “இந்தப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனாவை அழைத்தபோது, ஜெயலலிதா மாதிரி நடிக்க நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.. நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுயமதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா.. கங்கனாவும் அதே போன்றவர் தான். தற்போது தேசிய விருதை வென்றுள்ளார். தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.” என கூறினார்
இந்தபடத்திற்கும் விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியுள்ளார். ஏற்கனவே கங்கனா இந்தியில் நடித்து இயக்கிய மணிகர்ணிகா படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியும் உள்ளார். அந்த நட்பின் அடிப்படையில், விஜயேந்திர பிரசாத் தான் இந்தப் படத்திற்குள் கங்கனாவை அழைத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..