என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 'பார்சி' தொடரில் ரேகாவாகவும், 'ராக்கெட் பாய்ஸ்' தொடரில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது விடாமுயற்சி, பிளாஷ்பேக், பார்டர் படங்களில் நடித்து வருகிறார்.
ரெஜினா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் கடற்கரையையும், கடலையும் சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அவர் எஸ்யூபி மெரினா கிளப் குழுவினருடன் இணைந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “ எனக்கு கடலும், கடற்கரையும் பிடித்தமான இடங்கள். அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அதை செயல்படுத்தும் விதமாக மெரினா கிளப் குழுவினரோடு இணைந்து கொண்டேன். கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்த குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.