என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் |
பாகுபலி என்கிற வரலாற்று படத்தைத் தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது காதல் பின்னணியில் உருவாகிவரும் ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக் பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ணகுமார் என்பவர் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவாகி வருவதால் படத்தின் நாயகன் பிரபாஸ் கவலையில் இருக்கிறாராம். இதுவரையிலான செலவு மட்டுமே சுமார் 250 கோடியை தாண்டியுள்ளதாம்.. ஏற்கனவே தனது சாஹோ படம் வியாபார ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், ஆக்சன் படமாக இல்லாமல், முழுக்க முழுக்க காதல் கதையாக இந்த ராதே ஷ்யாம் உருவாகி வருவது தான் பிரபாஸின் கவலைக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.