எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு | கரகாட்டக்காரன் 2 வருமா - ராமராஜன் பதில் |
பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், சமீபத்தில் வெளியான அவரது சலார் திரைப்படம் ஆவேரேஜான வரவேற்பை பெற்றாலும் கூட பிரபாஸுக்கான கிரேஸ் மற்றும் வியாபார மதிப்பில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக கல்கி படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்ததாக ஸ்பிரிட் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
இடையில் ஓய்வுக்காகவும் மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் அவ்வப்போது லண்டன் சென்று வருகிறார் பிரபாஸ். அங்கே செல்லும்போதெல்லாம் அவர் வழக்கமாக வாடகைக்கு ஒரு மிகப்பெரிய பங்களா ஒன்றை தேர்வு செய்து தங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது அந்த பங்களாவையே விலை கொடுத்து வாங்கி தனக்கு சொந்தமாக்கியுள்ளாராம் பிரபாஸ். இதை அடுத்து தனது டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு அந்த பங்களாவில் சில புதிய வேலைப்பாடுகளையும் பிரபாஸ் செய்து வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.