‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நாகார்ஜூனா- கார்த்தி நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் முதலில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்த ஸ்ருதிஹாசன் பின்னர் அந்த படத்தில் இருந்து திடீரென விலகினார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்படத்தை தயாரிக்கும் பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் ஸ்ருதிஹாசன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்தது. அதனால் அவர் எந்த படங்களிலும் நடிக்கக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் தற்போது அதை எதிர்த்து ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அந்த நிறுவனத்தின் படத்தில் நான் நடிப்பதாக ஒத்துக்கொண்டபோதும் முன்பணம் எதுவும் பெறவில்லை. மேலும், படப்பிடிப்பு நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே எனக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று சொல்லியும், கடைசி நேரத்தில் தகவல் கொடுத்தனர். அதனால் நான் புலி உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகியிருந்ததால் அவர்கள் சொன்ன நாளில் என்னால் கால்சீட் ஒதுக்கவும் இயலவில்லை. அதன்காரணமாகவே அப்படத்தில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று மனுவில் கூறியிருப்பவர், அவர்கள் என்மீது வழக்கு போடுவதற்கு முன்பே அந்த படத்தின் நாயகியாக தமன்னாவை புக் பண்ணி விட்டனர். ஆனால் அந்த விசயத்தை சொல்லாமல் மறைத்து விட்டார்கள் என்று அந்நிறுவனத்தின் மீது புகார் ஒன்றும் கூறியுள்ளார்.
இப்படி தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ள ஸ்ருதிஹாசன், என் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதையடுத்தே ஸ்ருதிஹாசன் மீதான தடை நீக்கப்படுமா? இல்லை தொடருமா? என்பது தெரிய வரும்.