மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! |
பாலிவுட் நடிகரான அமீர் கானின் அம்மா சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக அவர் கடந்த சில வாரங்களாக சென்னையிலேயே தங்கியுள்ளார். அவர் நடிகர் விஷ்ணு விஷால் வீட்டில் கடந்த சில நாட்களாகத் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் உள்ள காரப்பாக்கத்தில் இருக்கும் தன் வீட்டிலிருந்து விஷ்ணு விஷால் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக காலையில் டுவீட் செய்திருந்தார். அதன்பிறகு அவரை மீட்புப் படையினர் மீட்டனர். விஷ்ணு விஷால், அவரது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் அமீர் கான் உள்ளிட்டவர்கள் அப்போது மீட்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் மீட்புக் குழுவினர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து விஷ்ணு விஷால் தான் மீட்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.