பிரபாஸின் புஜ்ஜியை வடிவமைத்ததில் ஆனந்த் மஹிந்த்ரா பெருமிதம் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் ராம் ரிலீஸ் ; தயாரிப்பாளர் உறுதி | படப்பிடிப்பில் பிரித்விராஜிடம் இருமுகம் காட்டும் மோகன்லால் | விவாகரத்து செய்தி - நமீதா கொடுத்த விளக்கம்! | ஓடிடியால் தியேட்டருக்கு செல்லும் மனநிலை குறைந்து வருகிறது! -ஹிப் ஹாப் ஆதி பேச்சு | மே 28ம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அன்னதானம்! விஜய் வெளியிட்ட அறிக்கை | 3வது திருமணம் செய்து கொண்ட நடிகை மீரா வாசுதேவன்! | மோகனின் ஹரா படத்தின் டிரைலர் வெளியானது! | 2024ன் மற்றுமொரு 25 நாள் படம் 'அரண்மனை 4' | தமிழில் பிஸியாக இருக்கும் கிரித்தி ஷெட்டி |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஆமீர்கான் ஆகியோருக்கு அடுத்தடுத்து தன் வீட்டில் விருந்து கொடுத்துள்ளார் 'ஆர்ஆர்ஆர்' நடிகரான ராம் சரண். சல்மான்கான் தற்போது தன்னுடைய 'கபி ஈத், கபி தீவாளி' ஹிந்திப் படத்திற்காக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார்.
அப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் ராம் சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களை ராம்சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் வரவேற்று விருந்தளித்தனர். இது மூன்று தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் சல்மான் கான் அது போல ராம்சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அடுத்தடுத்து சல்மான், ஆமீர் ஆகியோருக்கு தனது வீட்டில் விருந்தளித்தது குறித்து ராம்சரண் மனைவி புகைப்படங்களுடன் இன்ஸ்டாவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார் ராம்சரணின் அப்பா நடிகர் சிரஞ்சீவி. அதில் நடிகர் சல்மானும் கலந்து கொண்டார்.