சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கி உள்ளார். ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இன்வஸ்டிகேஷன் திரில்லர் படமாக இது உருவாகி வருகிறது. இதில் ஐஸ்வர்யா பழிவாங்கும் பெண்ணாகவும், அர்ஜூன் அவரை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் மற்ற பணிகள் நாளை முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டின் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.