கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
காக்க முட்டை படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை சில புள்ளிகள் வித்தியாசத்தில் தவறவிட்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்து கனா படத்திற்கு கிடைக்கும் என்றார்கள். அதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் தான் தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. இந்த நிலையில் சென்னையில் நடந்து வந்த 18வது சர்வதேச திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. க.பெ.ரணசிங்கம் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது: உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. க/பெ ரணசிங்கம் படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் என் அன்பான நன்றி. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்கு தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். நல்ல நடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெரு நன்றியும். என்றார்