‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா |
இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ‛‛திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததால் தான் இன்னமும் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்துவாக அடையாள படுத்துகிறார்கள்'' என்றார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு இதுதொடர்பாக கூறுகையில், ‛‛ராஜராஜ சோழன் இந்து இல்லையென்றால் வேறு என்ன கிறிஸ்துவரா இல்ல இஸ்லாமியரா. உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் உள்ளிட்ட அனைத்தும் இந்திய மதங்களும். இதையே இந்து என்றார்கள். உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள். நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை'' என்றார்.