‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டவன் தான் ட்ரைவர் பல்சர் சுனில்.. இவனுக்கு பணம் கொடுத்து இந்த வேலையை செய்ய சொன்னது நடிகர் திலீப் தான் என்கிற புகாரின் பேரில் இப்போது பல்சர் சுனிலும் திலீப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.. பல்சர் சுனிலிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் 2 மாதம் ட்ரைவராக வேலை பார்த்ததாக கூறி இருந்தான்..
சில தினங்களுக்கு முன் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்திய போலீஸார், பல்சர் சுனில் கூறியது பற்றி விசாரிக்கையில், தனக்கு பல்சர் சுனில் யாரென்றே தெரியாது என்றும், அந்த நபர் சொல்வது பொய் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார் காவ்யா மாதவன். ஆனால் போலீஸார் காவ்யா மாதவனிடம் பல்சர் சுனில் வேலை செய்தானா, காவ்யா மாதவன் சொல்வது உண்மையா என்பதை உறுதிப்படுத்த காவ்யா மாதவனின் நண்பர்கள் வட்டாரத்திலும், அவரது அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனராம்.