ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
அங்கமாலி டைரீஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா ராஜன். அதன்பிறகு வெளிபாடின்டெ புஸ்தகம், மதுர ராஜா, ஐயப்பனும் கோஷியும் உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். தனியார் செல்போன் நிறுவன ஊழியர்களால் அன்னா சிறை வைக்கப்பட்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
டூப்ளிகேட் சிம் வாங்குவதற்காக நேற்று கொச்சி ஆலுவா பகுதியில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சென்று உள்ளார் அன்னா. புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்பாக அங்கிருந்த ஒரு பெண் ஊழியருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே மற்ற ஊழியர்கள் சேர்ந்து நிறுவனத்தின் ஷட்டரை இழுத்து பூட்டி நடிகை அன்னாவை சிறை வைத்தனர். உடனே தன்னிடமிருந்த செல்போன் மூலம் நண்பர்களை அழைத்துள்ளார் அன்னா. நண்பர்கள் வந்து அவரை மீட்டுள்ளனர். இது தொடர்பாக அன்னா போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அன்னா புகாரை வாபஸ் பெற்றார்.