Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை

08 மே, 2024 - 12:25 IST
எழுத்தின் அளவு:
The-ongoing-Malayali-Pram-India-story-plagiarism-controversy

மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் மலையாளி பிரம் இந்தியா என்கிற படம் கடந்த மே-1ல் வெளியானது. ஏற்கனவே பிரித்திவிராஜை வைத்து ஜன கன மன படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அந்த அளவிற்கு வரவேற்பையும் வசூலையும் பெற தவறி உள்ளது. அதேசமயம் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் பிரபல மலையாள கதாசிரியர் நிஷாத் கோயா என்பவர் சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “2021ல் ஜோஷி இயக்கத்தில் ஜெயசூர்யா நடிப்பதற்காக இந்த கதையை அவர்களிடம் சொன்னேன். ஆனால் அந்த படம் நடக்கவில்லை. அதே சமயம் இதில் ஆர்வமாக இருந்த ஜெயசூர்யா, டிஜோ ஜோஸ் ஆண்டனியிடம் இந்த படத்தின் கதையை கூறுமாறு என்னிடம் சொன்னார். ஆனால் நான் கதை கூறியதும் தனக்கு பிடிக்கவில்லை என்று டிஜோ ஜோஸ் கூறிவிட்டார். அதன் பிறகு சில காலம் கழித்து சலார் படப்பிடிப்பில் இருந்த பிரித்விராஜை நேரில் சந்தித்து இந்த கதை பற்றி கூறினேன்.

அப்போது அவர் இதே போன்று ஒரு கதையைத்தான் டிஜோ ஜோஸ் ஆண்டனி படமாக்கி வருகிறார் என்ற தகவலை சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து நான் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கு வாட்ஸ் அப்பில் விளக்கம் கேட்டு செய்தி அனுப்பினேன். ஆனால் இந்தியா பாகிஸ்தான் என்கிற விஷயத்தை தவிர இதில் எதுவுமே உங்கள் கதை இல்லை. நான் புதிதாக பண்ணியிருக்கிறேன் என்று அவர் கூறினார்.

ஆனால் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அதில் நான் எழுதிய காட்சிகள் படமாகி இருப்பதை பார்க்க முடிந்தது. அதனால் தான் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு இந்த படத்தின் கதை என்னுடையது என்பது போன்று நான் ஒரு பதிவிட்டேன். அதன் பிறகு தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால் அதை நீக்கி விட்டேன்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் தனக்கான இழப்பீடு வேண்டும் என்றோ அல்லது வேறு எந்த விஷயங்கள் பற்றியோ அவர் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை கனகலதா காலமானார்நடிகை கனகலதா காலமானார் மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in