போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கடந்த 20 வருடங்களாக திரையுலகில் நடிகைகளின் நம்பர் ஒன் இடத்தில் நின்று தனது ஆளுமையை செலுத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் முதல்முதலாக அறிமுகமானது மலையாளத்தில் மனசினக்கரே என்கிற படத்தில் தான். ஜெயராம் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தை பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியிருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நயன்தாராவை அறிமுகப்படுத்திய நிகழ்வு பற்றி இயக்குனர் சத்யன் அந்திக்காடு பேசும்போது, “அந்த படத்திற்காக புதுமுகம் ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது நகை விளம்பரத்தில் நடித்த நயன்தாராவின் புகைப்படத்தை பத்திரிக்கை ஒன்றில் பார்த்தேன். அதன் பிறகு அவரை தொடர்புகொண்டு இந்த படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தேன். ஆரம்பத்தில் அவர் ஒப்புக்கொண்டாலும் பின்னர் படத்தில் நடிக்கவில்லை என்று கூறி பின்வாங்கினார்..
காரணம் அவரது உறவினர்கள் தரப்பில் இருந்து அவர் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய எதிர்ப்பு கிளம்பியது தான். அதேசமயம் நயன்தாராவின் பெற்றோர் தனது மகள் சினிமாவில் நடிப்பதற்கு எந்தவித மறுப்பும் சொல்லவில்லை. அதனால் நயன்தாராவை உற்சாகமூட்டி இந்த படத்தில் நடிக்க வைத்தேன். டயானா என்கிற பெயரையும் மாற்றி சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் சூட்டினேன்” என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் சத்யன் அந்திக்காடு