படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
மோகன்லாலை பொருத்தவரை கடந்த இரண்டு வருடங்களாக தனது படங்களின் ரிலீஸில் பரமபத ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக தியேட்டரில் படங்கள் வெளியாகாத சூழ்நிலையில் அவர் நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அதைத்தொடர்ந்து நிலைமை ஓரளவு சீரான பின்பு அவர் நடித்து நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரைக்கார் திரைப்படம் தியேட்டரில் வெளியானது.
இதையடுத்து அவரது படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என நினைத்தால் பிருத்விராஜ் டைரக்ஷனில் அவரும் மோகன்லாலும் இணைந்து நடித்த புரோ டாடி திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில்தான் ரிலீசானது. இதைத்தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் மோகன்லால் மீது அதிருப்தியில் இருந்ததால் அதற்கு அடுத்ததாக வெளியான மோகன்லாலின் ஆராட்டு படம் தியேட்டர்களில் வெளியானது.
இதில் தியேட்டர்களில் வெளியான மரைக்கார் மற்றும் ஆராட்டு படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெறத் தவறின. அதேசமயம் ஓடிடியில் வெளியான திரிஷ்யம்-2 மற்றும் புரோ டாடி ஆகிய படங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டதுடன் வெற்றி படங்களாகவும் அமைந்தன.
இந்த நிலையில் தற்போது ஜீத்து ஜோசப் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ள டுவல்த் மேன் படமும் தியேட்டர்களை ஒதுக்கிவிட்டு ஓடிடி தளத்தில்தான் ரிலீசாக இருக்கிறது என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அநேகமாக இனிவரும் நாட்களில் தியேட்டருக்கு ஒன்று, ஓடிடிக்கு ஒன்று என மோகன்லாலின் பட ரிலி இப்படித்தான் இருக்கும் போல தெரிகிறது.