இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
என்.டி.பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படம் அவரது முந்தைய சாதனைகளை முறியடித்து தற்போதும் ஓடிடி தளத்திலும், தியேட்டரிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஐதராபாத் போக்குவரத்து போலீஸ்.
என்.டி.பாலகிருஷ்ணாவும், படத்தின் நாயகி ஜெய்ஸ் வாலும் ஜீப்பில் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு லாரி குறுக்கே வந்துவிட திடீர் என்று பிரேக் போடுவார் பாலய்யா. இதனால் பக்கத்து சீட்டில் இருக்கும் ஜெய்ஸ்வால் தலை காரின் முன்பகுதியில் போதும். அதனை தன் கை வைத்து தடுக்கும் பாலையா. முதலில் சீட் பெல்ட போட வேண்டும் என்பார்.
இந்த காட்சியை காரில் செல்வபர்கள் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும் என்கிற விழிப்புணர்வுக்காக ஐதராபாத் போலீசார் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திய நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குனர் போயபதி ஸ்ரீனு ஆகியோருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் விழிப்புணர்வுக்கு புஷ்பா படத்தில் இடம்பெற்ற அல்லு அர்ஜுன் படத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.