உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
அதிரடியான கருத்துக்களை துணிச்சலாக சொல்வதற்கு தயங்காதவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் கடந்த வருடம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்த சமயத்தில், சுஷாந்தின் வாய்ப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதற்கு காரணம், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மற்றும் அவரைப்போன்ற வாரிசு நடிகர்கள் தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். குறிப்பாக கரண் ஜோஹரை நேபோடிசம் கிங் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் கார்கில் வீரர் விக்ரம் மல்ஹோத்ரா வாழ்க்கை பற்றிய படமாக ஷெர்ஷா என்கிற படம் வெளியாகி இருந்தது. பலரின் பாராட்டுக்களை பெற்ற இந்தப்படம் கங்கனாவின் பாராட்டையும் பெற தவறவில்லை. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தை தயாரித்தது கங்கனாவின் பரம எதிரியான கரண் ஜோஹர் தான், அவர் மீதான தனது எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல படைப்புகளை பாராட்ட வேண்டும் என்கிற நோக்கில் கங்கனா இந்த படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என்றே தெரிகிறது.